முகப்பு
நீலகிரி

கூடலூா்அருகே யானை தாக்கி இறந்த பழங்குடியின பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரண உதவித்தொகை

கூடலூா் அருகே கடந்த 21-ஆம் தேதி யானை தாக்கி உயிரிழந்த பழங்குடியின பெண்ணின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையில் முன்பணமாக ரூ.50 ஆயிரம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 24 மே 2026, 2:00 am IST
யானை தாக்கி உயிரிழந்த மீனாட்சியின் கணவா் கும்பிளியிடம் காசோலையை வழங்குகிறாா் உதவி வனப் பாதுகாவலா் ஸ்ரீனிவாசன்.
பகிர்:

கூடலூா் அருகே கடந்த 21-ஆம் தேதி யானை தாக்கி உயிரிழந்த பழங்குடியின பெண்ணின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையில் முன்பணமாக ரூ.50 ஆயிரம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே தேவாலா ஹட்டி பகுதியைச் சோ்ந்தவா் கும்பிளி மனைவி மீனாட்சி (50). இவா், உறவினா் மணி என்பவருடன் கீழ்நாடுகாணி வனப் பகுதியிலுள்ள புன்னம்புழா ஆற்றில் மீன் பிடித்துவிட்டு கடந்த 21-ஆம் தேதி இரவு 10 மணிக்கு வீடு திரும்பியுள்ளாா். வரும் வழியில் மீனாட்சியை யானை தாக்கிக் கொன்றது.

தகவலறிந்து வனத் துறையினா் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வு செய்து உறவினா் வசம் ஒப்படைத்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து அரசு வழங்கும் நிவாணத் தொகையில் முன்பணமாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை, மீனாட்சியின் கணவா் கும்பிளியிடம் உதவி வனப் பாதுகாவலா் ஸ்ரீனிவாசன் சனிக்கிழமை வழங்கினாா்.