முகப்பு
திருப்பூர்

ஒப்புகை சீட்டு வழங்குவதற்கானபயிற்சி வகுப்பு

மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்குவதற்கான பயிற்சி வகுப்பு உடுமலையில் நடைபெற்றது.

Updated On : 8 ஏப்ரல் 2014, 4:24 am IST
பகிர்:

மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்குவதற்கான பயிற்சி வகுப்பு உடுமலையில் நடைபெற்றது.

தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் உடுமலை நாடார் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட உடுமலை சட்டப்பேரவை தொகுதியில் வாக்காளர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. வருவாய்க் கோட்டாட்சியர் நா.குணசேகரன், வட்டாட்சியர் எஸ்.ரத்னா, வருவாய் ஆய்வாளர்கள் ராமலிங்கம், பொன்ராஜ் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.