திருப்பூர்

கணவர் துன்புறுத்துவதாக மனைவி புகார்

DIN

கணவர் அடித்து துன்புறுத்துவதாக மனைவி புகார் தெரிவித்துள்ளார்.
பல்லடம், வடுகபாளையம், ஹாஸ்டல் சாலை, ஸ்ரீநகரை சேர்ந்தவர் இளங்கோ (47). உதவி மின் செயற்பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராமபிரபா (42). இவர்களுக்கு ராக பவித்ரா (14), ராகவர்ஷினி (10) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கணவர் இளங்கோ, தனது நடத்தையில் சந்தேகப்பட்டு தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்துத் துன்புறுத்துவதாகவும், அடமானம் வைத்த தனது நகைகளைத் திருப்பித் தரவில்லை என்றும் ராமபிரபா பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT