திருப்பூர்

அரசுப் பேருந்து மோதி எலக்ட்ரீஷியன்  சாவு

DIN

பல்லடத்தில் அரசுப் பேருந்து மோதியதில் எலக்ட்ரீஷியன் வியாழக்கிழமை உயிரிழந்தார். 
நீலகிரி மாவட்டம்,  பந்தலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏசையன் மகன் அந்தோணி (55). இவர் திருப்பூர் மாவட்டம், பல்லடம்,  கொசவம்பாளையம் சாலையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தார். 
இந்நிலையில் அந்தோணி,  பல்லடம் -  கரடிவாவி சாலையில் வியாழக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து,  அந்தோணி மீது மோதியது.  இதில் படுகாயம் அடைந்த அந்தோணி  பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பல்லடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT