திருப்பூர்

சுகாதாரச் சீர்கேடு: தனியார் நிறுவனம், வீடுகளுக்கு ரூ. 45 ஆயிரம் அபராதம்

DIN

தாராபுரம் நகரில் சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் இருந்த தனியார் நிறுவனம் மற்றும் வீடுகளுக்கு நகராட்சி சார்பில் மொத்தம் ரூ. 45 ஆயிரம் புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் உள்ளாட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
அதன்படி, தாராபுரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையில் 63 பணியாளர்கள் நகரில் பல்வேறு இடங்களில்  சோதனை மேற்கொண்டு, கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது,  தாராபுரம் சங்கர் மில் பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனம் சுகாதாரச் சீர்கேட்டுடன் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. அதனால், அந்த நிறுவனத்துக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், நகரில் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் ஆய்வு மேற்கொள்ளபட்டதில், சுகாதாரச் சீர்கேடு கண்டறியப்பட்டு, ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT