திருப்பூர்

ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 5 பேர் காயம்

DIN

திருப்பூரில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஷேர் ஆட்டோ நிலைதடுமாறி சாலையோர கழிவுநீர்க் கால்வாய்க்குள் வியாழக்கிழமை கவிழ்ந்ததில்  5 பேர் காயமடைந்தனர்.
 இதுகுறித்து போலீஸார் கூறியது:
திருப்பூர்,  நல்லூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (30).  இவர்,  ஷேர் ஆட்டோ ஓட்டிவருகிறார். இவர்,  ஷேர் ஆட்டோவில் 8 பயணிகளுடன் நல்லூரிலிருந்து காங்கயம் சாலை வழியாக திருப்பூர் பழைய பேருந்து நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்துகொண்டிருந்தார். வழியில், காங்கயம் சாலை  பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே சாலையில் வாகனம் குறுக்கே சென்றதால், ஷேர் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கழிவுநீர்க் கால்வாய்க்குள் பாய்ந்தது.
  இதில், ஆட்டோவில் பயணித்த 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்களை அப்பகுதி பொது மக்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்குப் பிறகு இவர்கள் வீடு திரும்பினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT