திருப்பூர்

தொழிலாளி வீட்டின் பூட்டை  உடைந்து ரூ.5 லட்சம் திருட்டு

DIN

பல்லடத்தில், பின்னலாடைத் தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து  ரூ. 5 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
 பல்லடம், கள்ளகிணறு பகுதியைச் சேர்ந்தவர்  செல்லமுத்து மகன் தங்கவேல் (36).  இவர்,  அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார்.  இவரது மனைவி வித்யா (30). இவர்களது மகன்கள் கிஷோர், கௌசிக்.
 தங்கவேல் தன் குடும்பத்தாருடன் ஞாயிற்றுக்கிழமை காலை கோவைக்கு சென்றார்.  பின்னர் அவர்கள் இரவு 11.30 மணி அளவில் வீடு திரும்பினர்.  அப்போது,  வீட்டின் தாழ்பாள் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
   இவரது வீட்டுக் கதவின் தாழ்பாளை உடைத்து மர்ம நபர்  உள்ளே புகுந்து,   பீரோவில் தொங்கிக்கொண்டிருந்த சாவியால்  பீரோவைத் திறந்து,  ரூ. 5 லட்சம் ரொக்கத்தைத் திருடி சென்றுள்ளனர். சம்பவ இடத்தில் பல்லடம் டி.எஸ்.பி.முத்துசாமி ஆய்வு செய்தார்.
 இது குறித்த புகாரின் பேரில் பல்லடம் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் முத்துசாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

SCROLL FOR NEXT