திருப்பூர்

விவசாயத் தொழிலாளி தற்கொலை

DIN

பல்லடம் கே.என்.புரத்தில் கிணற்றில் குதித்து விவசாயத் தொழிலாளி வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
பல்லடம், கே.என்.புரத்தில் புண்ணியமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாயக் கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.  இதைத் தொடர்ந்து,  பல்லடம் தீயணைப்புத் துறையின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டது. 
விசாரணையில் உயிரிழந்தவர், அதே பகுதியைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளி புஷ்பராஜ் என்பது உறுதிசெய்யப்பட்டது. மது அருந்தும் பழக்கம் கொண்ட  புஷ்பராஜுக்கு,  மனைவி, மகனுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மது அருந்தி விட்டு வீட்டுக்கு வியாழக்கிழமை வந்துள்ளார். இதனால் வீட்டில் இருப்பவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
இதில் மனமுடைந்த புஷ்பராஜ் அதே பகுதியில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. இது பற்றி பல்லடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT