மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஜனவரி 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து வேளாண்மைத் துறை சார்பில் கூறியதாவது:
மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஜனவரி 25-ஆம் தேதி, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ஆரங்கில், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், விவசாயிகள் அனைவரும் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து, நிவர்த்தி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.