திருப்பூர்

ஆறாக்குளம் பிரிவில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு

DIN

பல்லடம் அருகே ஆறாக்குளம் பிரிவில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜனிடம் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினர்.
பல்லடத்தில் சட்டப் பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜனை அவரது அலுவலகத்தில் சந்தித்த ஆறாக்குளம்,கோடங்கிபாளையம்,பருவாய் கிராம மக்கள் அளித்த மனு விவரம்: 
கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக்குளம் பிரிவில் உள்ள தோட்டத்தில்புதியதாக டாஸ்மாக் கடை தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் தனியார் மேல்நிலைப் பள்ளி, கல்லூரி, நூற்பாலை, தனியார் நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிறுத்தம் ஆகியன உள்ளன. அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் மக்களுக்கு பெரிதும் இடையூறாக இருக்கும்.  எனவே, அந்தக் கடையை வேறு இடத்துக்கு மாற்றி அமைத்திட வேண்டும் என அதில் தெரிவித்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT