திருப்பூர்

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி உடுமலை அருகே ரேக்ளா பந்தயம்

DIN

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70ஆவது பிறந்த நாளை ஒட்டி உடுமலை அருகே குருவப்பநாயக்கனூர் கிராமத்தில் ரேக்ளா பந்தயம்  நடைபெற்றது.
திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன்  ரேக்ளா பந்தயத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
இதில்,  உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டங்களில் இருந்து 250- க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன. 100 மீ.,  200 மீ., என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. வெற்றிபெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகள், கோப்பைகள் வழங்கப்பட்டன.
முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் சுப்பிரமணி யம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT