அலகுமலையில் மனுநீதி நாள் முகாம்
பல்லடம் அருகே அலகுமலையில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பல்லடம் அருகே அலகுமலையில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பொங்கலூர் ஒன்றியம் அலகுமலை கிராமத்தில் முத்துக்குமாரசாமி திருமண மண்டபத்தில் இந்த முகாம் நடைபெற்றது. முகாமில் 168 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பிலான வீட்டுமனை பட்டா, முதியோர் உதவி தொகை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி பேசுகையில், இன்று மக்களைத் தேடி அரசு அதிகாரிகளே கிராமங்கள்தோறும் சென்று இதுபோன்ற முகாம்களை நடத்தி மக்களின் தேவை அறிந்து உதவி செய்து வருகின்றனர்' என்றார்.
பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் எம்.சண்முகம், பொங்கலூர் ஒன்றிய முன்னாள் தலைவர் எஸ்.சிவாசலம், திருப்பூர் சார் ஆட்சியர் ஷ்ரவண்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ரமேஷ், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் லியாகத், வேளாண்மை இணை இயக்குநர் முகமது இக்பால், திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.