உத்தமபாளையம் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி பலி!
சின்னமனூரில் மின்னல் பாய்ந்ததில் விவசாயி பலியானது குறித்து...
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சியில் உள்ள சின்னமனூரில் மின்னல் பாய்ந்ததில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சின்னமனூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியில் வெள்ளிக்கிழமை (மே 1) மாலை பலத்த சூறாவளிக்காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
அங்குள்ள ஒரு தனியார் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த கூலித் தொழிலாளர் மீது மின்னல் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஓடைப்பட்டி காவல்துறையினர், உயிரிழந்த விவசாயியின் உடலை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
Advertisement
காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் சின்னமனூர் அருகே கண்ணியம்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி மகன் கார்த்தீஸ்வரன் (31), தனியார் தோட்டத்தில் கூலி வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் பாய்ந்து பலியானது தெரியவந்துள்ளது.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.