முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதி இளைஞர் சாவு

திருப்பூரில் இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 22 மே, 2018 at 12:39 AM
பகிர்:

திருப்பூரில் இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் காங்கேயம் சாலை அமர்ஜோதி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக் (28). இவர் திருப்பூர் வளம் பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சேலத்திலிருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசுப் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து பொதுமக்கள், விபத்துக்குள்ளாக்கிய பேருந்தையும், ஓட்டுநர் முருகன் மற்றும் நடத்துநரை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வடக்கு போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஓட்டுநர் முருகனை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.