வனக் காப்பாளர் பணியிடத் தேர்வுக்கு திருப்பூரில் நாளைமுதல் இலவச பயிற்சி
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்ட வனக் காப்பாளர், இந்து அறநிலையத் துறை காலிப் பணியிடங்களுக்கான தேர்வுக்காக
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்ட வனக் காப்பாளர், இந்து அறநிலையத் துறை காலிப் பணியிடங்களுக்கான தேர்வுக்காக இலவச பயிற்சி வகுப்பு திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதன்கிழமை முதல் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி விடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவற்றால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கென இலவசப் பயிற்சி வகுப்புகள், மாதிரித் தேர்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் தற்போது 726 வனக் காப்பாளர், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணிக் காலியிடங்களை நிரப்ப அக்டோபர் 6ஆம் தேதிஅறிக்கை வெளியிடப்பட்டது.
இதில் வனக் காப்பாளர் பதவிற்கு பிளஸ் 2 அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு குறைந்தபட்சம் 21, அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்து அறநிலையத் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கான தேர்வுக்கு டிசம்பர் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இத் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதன்கிழமை (நவம்பர் 14) காலை 10 மணி முதல் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் இலவசப் பயிற்சியில் கலந்துகொள்ள தங்கள் பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வகுப்பில் முந்தைய தேர்வுகளின் மாதிரி வினாத்தாள்கள், தேர்வுக்கான பாடக் குறிப்புகள் வழங்கப்படும். பயிற்சியின் இறுதியில் மாதிரித் தேர்வும் நடத்தப்பட உள்ளது.