முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு

ஆர்.எஸ்.எஸ் 94ஆம் ஆண்டு துவக்கத்தையொட்டியும், விஜயதசமியையொட்டியும்  சீருடை அணி வகுப்பு

Updated On : 22 அக்டோபர், 2018 at 8:00 AM
பகிர்:

ஆர்.எஸ்.எஸ் 94ஆம் ஆண்டு துவக்கத்தையொட்டியும், விஜயதசமியையொட்டியும்  சீருடை அணி வகுப்பு, பொதுக்கூட்டம்  திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
   கற்பக விநாயகர் கோயிலில் இருந்து தொடங்கிய ஆர்.எஸ்.எஸ். சீருடை  அணிவகுப்பு சின்னச்சாமி அம்மாள் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அருகில் நிறைவடைந்தது.  முன்னதாக, இந்நிகழ்ச்சிக்கு சக்தி பிலிம்ஸ் எம்.சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
தேவி கேக் சாமிநாதன், திருப்பூர் கோட்டத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எவரெடி சுப்பிரமணியம் அணி வகுப்புப் பேரணியைத் துவக்கி வைத்தார்.  
இதைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தென் தமிழக செயலாளர் ஆ.ஆடலரசன் சிறப்புரையாற்றினார். 
அப்போது அவர், கடந்த  94 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு ஆலமரம்போல பல கிளைகளாகப் பறந்து விரிந்து காணப்படுகிறது. 
சபரிமலை விவகாரத்தில் பக்தர்கள் கருத்தை புறக்கணிக்கக் கூடாது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.