பாம்பு கடித்து ஆசிரியை சாவு
திருப்பூரில் பாம்பு கடித்து தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழந்தார்.
திருப்பூரில் பாம்பு கடித்து தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழந்தார்.
நாகை மாவட்டம், தரங்கம்பாடி, பொறையூர் பட்டுநூல்காரர் தெருவைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகள் ஆனந்தி (38). இவர், திருப்பூர் வித்யாலயம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியிலேயே தங்கி, ஆசிரியையாகப் பணி யாற்றி வந்தார். கடந்த 10ஆம் தேதி அவரைப் பாம்பு கடித்துள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.