24இல் படைவீரர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
படைவீரர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் திருப்பூரில் வரும் 24ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.
படைவீரர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் திருப்பூரில் வரும் 24ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் கணேசன் வேலுசாமி வெளியிட்டுள்ள செய்தி:
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், படையில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் அக்டோபர் 24ஆம் தேதி மதியம் 3. 30 மணிக்கு ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவரைச் சார்ந்தோர்கள் பங்கேற்று தங்களது குறைகளை விண்ணப்பம் வாயிலாக தெரிவிக்கலாம்.