முகப்பு
திருப்பூர்

இடிந்து விழுந்த பூ மார்க்கெட் முகப்பு

திருப்பூர், ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் முகப்பு வாயில் சுவர் இடிந்து விழுந்தது. 

Updated On : 3 செப்டம்பர், 2018 at 7:36 AM
பகிர்:

திருப்பூர், ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் முகப்பு வாயில் சுவர் இடிந்து விழுந்தது. 
திருப்பூர், ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் கட்டடம் 50 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்தக் கட்டடத்தில் 100க்கும் மேற்பட்ட பூக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. 
எப்போதும் மக்கள் நெருக்கடி மிகுந்துள்ள இந்தப் பகுதியில், பூ மார்கெட் கட்டடத்தின் முகப்பு வாயில் சுவரில் ஆலமரம் வேர் ஊன்றி வளர்ந்து வருகிறது.  இதனால் முகப்புச் சுவர் முழுவதும் விரிசல் ஏற்பட்டு இருந்தது. 
இந்நிலையில், சுவற்றின் மேல் பகுதி கற்கள் ஞாயிற்றுக்கிழமை பெயர்ந்து விழுந்தன. மேலும் கட்டடத்தின் பெரும்பாலான பகுதிகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 
எனவே, அசம்பாவிதங்கள் ஏதும்  ஏற்படும் முன்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூ மார்க்கெட் கட்டடத்தைச் சீரமைக்க வேண்டும் என கடைகாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.