திருப்பூர்

உடுமலையில் செப்டம்பர் 20 இல் வீட்டுமனை வரன்முறை முகாம்

DIN

அனுமதியற்ற வீட்டு மனைப் பிரிவுகளில் உள்ள தனி மனைகளை வரன் முறைப்படுத்தும் சிறப்பு முகாம் உடுமலையில் செப்டம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து உடுமலை நகராட்சி ஆணையர் ஓ.ராஜாராம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
அனுமதியற்ற வீட்டு மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி  உடுமலை நகராட்சிப் பகுதிகளில் உள்ள அனுமதியற்ற வீட்டு மனைப் பிரிவில் உள்ள மனைகளை வரன்முறைப் படுத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. உடுமலை தளி சாலையில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் செப்டம்பர் 20 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. 
முகாமில் உரிய ஆவணங்களுடன் கட்டணங்களை செலுத்தி மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம்.  மேலும் விவரங்களுக்கு நகராட்சி அலுவலகத்தை அணுகலாம். இந்தத் திட்டம் நவம்பர் 3 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.  மனைகள் வரன்முறைப்படுத்தும் பட்சத்தில் மட்டுமே நகராட்சியால் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT