திருப்பூர்

அவிநாசி அருகே  இரு தரப்பினரிடையே மோதல்

DIN

அவிநாசி அருகே தொட்டக்களாம்புதூரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட  மோதலையடுத்து திங்கள்கிழமை இரவு காவல் துறையினர், வருவாய்த் துறையினர்  பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 
கானூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் தொட்டக்களாம்புதூர் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு மது போதையில் வந்து தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. 
தகவலறிந்த காவல் துறையினர், ஊர்ப் பொதுமக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து தொட்டக்களாம்புதூர், கானூர் பகுதியைச் சேர்ந்த இருதரப்பினர் சமதானம் அடைந்தனர். 
இந்நிலையில், மீண்டும் கானூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வந்து, தொட்டக்களாம்புதூர் பகுதியில் சில வீடுகளைத் தாக்கி, அங்கிருந்த சில நபர்களையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. 
இதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து, வருவாய்த் துறையினர், காவல் துறையினர் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT