திருப்பூர்

பெரியார் சிலை அவமதிப்பு: இளைஞர் கைது

DIN

தாராபுரத்தில் பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக  இளைஞரை செவ்வாய்க்கிழமை காவல் துறையினர் கைது செய்தனர்.
தாராபுரம், உடுமலை சாலை தீவுத்திடல் பகுதியில் பெரியார் சிலை அமைந்துள்ளது. இந்த சிலையை சமூக விரோதிகள் சிலர் அவமதிப்பு செய்துள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அப்பகுதியில் திராவிடர் கழகம், திமுகவினர் திரண்டனர். இதையடுத்து அங்கு வந்த தாராபுரம் காவல் துறையினர் சிலையை அவமதிப்பு செய்தோர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர், தாராபுரத்தைச் சேர்ந்த செங்கல் சூளை  உரிமையாளர் நவீன்குமார் (36) என்பவரை கைது செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT