திருப்பூர்

வெள்ளக்கோவிலில்  22 டன் முருங்கைக்காய் வரத்து

வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை 22 டன் முருங்கைக்காய் வரத்து இருந்தது.

DIN

வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை 22 டன் முருங்கைக்காய் வரத்து இருந்தது.
இங்கு வாரந்தோறும் தனியார் கொள்முதல் மையத்தில் முருங்கைக்காய்கள் வாங்கப்படுகின்றன. 
இந்த வாரம் 150 விவசாயிகள் ஏறத்தாழ 22 டன் அளவுக்கு முருங்கைக்காய்களைக் கொண்டு வந்திருந்தனர். மர முருங்கைக்காய், செடி முருங்கைக்காய் என இரு வகையும் கிலோ 4  ரூபாய்க்கு வியாபாரிகளால் வாங்கப்பட்டன. இது கடந்த வாரத்தை விட கிலோவுக்கு மூன்று ரூபாய் விலை குறைவாகும்.
கடந்த வாரம் 31 டன் வரத்து இருந்தது. இந்த வாரம் வரத்து குறைந்திருந்த நிலையிலும்கூட விலையும் அதிகரிக்கவில்லை. தரத்தில் சிறந்ததாக உள்ள செடி முருங்கைக்காய்களுக்கு அதிக விலை கிடைக்க வேண்டும். 
ஆனால், மர முருங்கைக்காய், செடி முருங்கைக்காய் ஆகிய இரண்டு வகையும் ஒரே விலைக்கு வாங்கப்படுவதால் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT