திருப்பூர்

எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN

உத்தரபிரதேச மாநிலத்தில்15 வயது சிறுவன் எரித்துக் கொலை செய்யப்பட்டத்தைக் கண்டித்து திருப்பூரில் எஸ்டிபிஐ கட்சியனர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
திருப்பூர் மாநகராட்சி முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருப்பூர் தெற்கு தொகுதி தலைவர் அன்வர் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.அபுதாகிர், மாவட்ட பொதுச்செயலாளர் ஹாரீஸ் பாபு, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மாவட்டத் தலைவர் ஹபீர் ரஹ்மான், மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப், எஸ்.டி.டி.யூ. மாநில செயற்குழு உறுப்பினர் பஷீர் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எஸ்.டி.பி.ஐ. மாநில செயற்குழு உறுப்பினர் ஷபீக் அஹமது, திராவிடர் விடுதலைக் கழக  மாவட்டத் தலைவர் முகில்ராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எஸ்.டி.பி.ஐ. திருப்பூர் தெற்கு தொகுதி துணைச்செயலாளர் சாதிக் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT