திருப்பூர்

குப்பைகளை அகற்றக்கோரி நூதன போராட்டம்

DIN

திருப்பூரில் குப்பைகளை அகற்றக்கோரி மக்கள் பாதுகாப்பு அமைப்பினர் குப்பைக்குள் அமர்ந்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
திருப்பூர் மாநகராட்சி 9 ஆவது வார்டுக்கு உள்பட்ட எஸ்.வி.காலனி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் அதிக அளவில் பின்னலாடை நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் சரிவர எடுப்பதில்லை. இதனால் குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிவதுடன் அதன் அருகிலேயே குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. 
எனவே, குப்பைகளை அகற்றும்படி அப்பகுதி பொதுமக்கள் சார்பில் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், மக்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் கார்மேகம் தலைமையில் அப்பகுதி மக்கள் குப்பைகளுக்குள் அமர்ந்து போராட்டம் நடத்தினர். 
இதுகுறித்த தகவலறித்து சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகள் அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். 
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT