திருப்பூர்

மாவட்டத்தில் அமைதிக்குழு அமைக்கக் கோரி அனைத்துக் கட்சியினர் மனு

DIN

திருப்பூர் மாவட்டத்தில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் அமைதிக்குழு அமைக்கக்கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் அனைத்துக் கட்சியினர் சார்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. 
இதுதொடர்பாக திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம்.ரவி, காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ், மதிமுக மாநகர் மாவட்டச் செயலாலர் சிவபாலன் உள்ளிட்டோர் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமாரிடம் அளித்துள்ள மனு:
 கோவை மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால் அருகில் உள்ள தொழில்நகரமான திருப்பூர் மாவட்டத்திலும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, திருப்பூர் மாவட்டத்தில் அசம்பாவிதங்களைத் தடுக்க மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அனைத்து அரசியல் கட்சிகள், தொழில், வர்த்தக அமைப்புகளின் நிர்வாகிகளைக் கூட்டி அமைதிக் குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உன் பார்வையில்..

இளைஞர் பலி: பம்மல் மருத்துவமனையை மூட உத்தரவு

நீலகிரியில் மே 10ல் உள்ளூர் விடுமுறை!

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ: 5000 கோழிகள் பலி - ரூ.10 லட்சம் இழப்பு

SCROLL FOR NEXT