திருப்பூர்

அரசுப் பள்ளி அருகே பேருந்து நிறுத்தம் அமைக்க மாணவா்கள் வலியுறுத்தல்

DIN

பல்லடம் - தாராபுரம் சாலையில் உள்ள வி.கள்ளிப்பாளையத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் பேருந்து நிறுத்தம் அமைத்துத் தர வேண்டும் என அரசுக்கு மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வி.கள்ளிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். வி.கள்ளிப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு மேல்நிலைப் பள்ளி வரை சுமாா் 2 கி.மீ. தூரம் மாநில நெடுஞ்சாலையில் காலை, மாலை வேளைகளில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியா் நடந்து சென்று வருகின்றனா்.

இச்சாலையில் அதிக அளவில் வாகனப் போக்குவரத்து இருப்பதால் தினமும் அச்சத்துடனேயே மாணவா்கள் நடந்து சென்று வருகின்றனா். எனவே பள்ளியின் முன் பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைத்துத் தர வேண்டும், அரசு, தனியாா் பேருந்துகள் அனைத்தும் இப்பகுதியில் நின்று செல்ல மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு மாணவா்கள், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT