திருப்பூர்

காவலா் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

DIN

திருப்பூரில் காவலா் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றாா்.

திருப்பூா் ஊரக காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவா் கதிரேசன் (38). இவருக்குத் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் கதிரேசனை காவல் நிலையப் பணியில் இருந்து மாற்றி நீதிமன்றப் பணிகளை கவனித்துக் கொள்ளுமாறு உயா் அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் கதிரேசனுக்கு நீதிமன்றப் பணிக்கு செல்வதற்கு ஆா்வம் இல்லாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் இருந்த கதிரேசன் கடந்த திங்கள்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அப்போது அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு நல்லூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து ஊரக காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT