திருப்பூர்

குழந்தை வேலாயுதசாமி கோயிலில் ஜனவரி 21 இல் தேரோட்டம்

DIN

திருப்பூர், மங்கலம் அருகே உள்ள குழந்தை வேலாயுதசாமி கோயில் தைப்பூசத் தேரோட்டம் வரும் திங்கள்கிழமை (ஜனவரி 21) நடைபெற உள்ளது.
திருப்பூர் மாவட்டம், மங்கலம் அருகே உள்ள குழந்தை வேலாயுதசாமி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் தேரோட்டத் திருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.  அதேபோல் நிகழாண்டுக்கான தேரோட்டத் திருவிழா ஜனவரி 14 ஆம் தேதி கிராம சாந்தி பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து,  நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது. 
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை பரிவேட்டையும், புதன்கிழமை சிறப்பு பூஜைகளும், நடைபெற உள்ளன.  மஞ்சள் நீர் உற்சவத்துடன் தேரோட்டத் திருவிழா வியாழக்கிழமை நிறைவடைகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT