திருப்பூர்

வாசிப்பை நேசிப்போம் நிகழ்ச்சி

DIN


உடுமலை கிளை நூலகம் எண்-2 சார்பில் வாசிப்பை நேசிப்போம் என்ற நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
உடுமலை வட்டம், கண்ணம்மநாய்க்கனூர் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஆர்.தமிழ்செல்வி தலைமை வகித்தார். நூலகர் வீ.கணேசன் வரவேற்றார். நூலக வாசக வட்ட துணைத் தலைவர் வி.கே.சிவகுமார் முன்னிலை வகித்தார். இதில் மாணவ, மாணவியரிடையே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் திருக்குறள் விநாடி-வினா நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
இதையொட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆசிரியர்கள் சுமதி, ஹேமாமாலினி, பாண்டிச்செல்வி, கலைவாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் கா.கோவிந்தராஜ் நன்றி கூறினார். நூலகர்கள் மகேந்திரன், அருள்மொழி, செல்வராணி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT