திருப்பூர்

சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை

DIN

வெள்ளக்கோவிலில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ தினமான ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
இந்தக் கோயில்களில் உள்ள நந்தி எம்பெருமானுக்கு புதிய பட்டாடை உடுத்தி, இளநீர், பஞ்சாமிர்தம், பால், தயிர் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
வெள்ளக்கோவில், மயில்ரங்கம், கண்ணபுரம், லக்கமநாயக்கன்பட்டி, உத்தமபாளையம் ஆகிய பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோயில்களில் நடைபெற்ற சிறப்புப் பூஜைகளில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பிரதோஷ வழிபாட்டுக் குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT