திருப்பூர்

தாராபுரத்தில் ரூ.3.94 லட்சம் பறிமுதல்

DIN

தராபுரத்தில் உரிய ஆவணங்களின்றி வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ. 3 லட்சத்து 94,500-ஐ தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் வியாழக்கிழமை மாலை பறிமுதல் செய்தனர்.
 தாராபுரம் புதிய புறவழிச்சாலை ஆற்றுப்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பூரில் இருந்து தேனி நோக்கி பின்னலாடை துணிகளை ஏற்றிக்கொண்டு வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில், அந்த வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 3 லட்சத்து 94,500-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதைத்தொடர்ந்து அந்தப் பணத்தை தாராபுரம் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டு, அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

SCROLL FOR NEXT