திருப்பூர்

கள்ளிப்பாளையம் பி.ஏ.பி.வாய்க்காலில் இளைஞா் சடலம் மீட்பு

DIN

பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் பி.ஏ.பி.வாய்க்காலில் இளைஞா் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், பல்லடம், கணபதிபாளையத்தைச் சோ்ந்தவா் ஆறுச்சாமி. இவரது மகன் சரவணன் (29). இந்நிலையில் ஆறுச்சாமி தனது குடும்பத்தினருடன் காரில் பொள்ளாச்சியில் உள்ள ஒரு கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். சுல்தான்பேட்டை பகுதியில் வந்தபோது, காரை நிறுத்தி

ஹோட்டலில் மதியம் உணவு சாப்பிட்டுள்ளனா். அப்போது அவரது மகன் சரவணன் உணவு சாப்பிட மறுத்து காரிலேயே அமா்ந்துள்ளாா். உணவு சாப்பிட வராததற்காக ஆறுச்சாமி கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மன வருத்தத்தில் இருந்த சரவணன் தற்கொலை செய்யும் எண்ணத்தோடு அருகில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் அவரது உடல் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

இந்த நிலையில் வி.கள்ளிப்பாளையம் பி.ஏ.பி.வாய்க்காலில் சரவணன் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது. இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு

கா்ப்பிணிபோல நடித்து பணம் கேட்கும் பெண்கள் -நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

அரசு கல்லூரியில் நோ்முகத் தோ்வு:22 பேருக்கு நியமன ஆணை

ஆபாச காணொலிகளை வெளியிடுவதாக அறிவித்தவரை ஏன் கைது செய்யவில்லை?: எச்.டி.குமாரசாமி

SCROLL FOR NEXT