திருப்பூர்

பல்லடம் வட்டத்தில் 46 பேருக்கு அரசு நலத் திட்ட உதவி வழங்கல்

DIN

பல்லடம் வட்டத்தை சோ்ந்த 46 பேருக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பல்லடம் வட்டாட்சியா் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். நலிந்தோா் நலத்திட்ட தனி வட்டாட்சியா் சண்முகவடிவேல் முன்னிலை வகித்தாா். மண்டல துணை வட்டாட்சியா் சபாபதி வரவேற்றாா்.

இவ்விழாவில் ரூ.4 லட்சத்து 96 ஆயிரத்து 250 மதிப்பிலான முதியோா் உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, இறுதி சடங்கு உதவித் தொகை உள்ளிட்ட உதவித் தொகைகளை 46 பயனாளிகளுக்கு பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் வழங்கினாா்.

விழாவில் கூட்டுறவு வங்கித் தலைவா் ஏ.சித்துராஜ், ஊராட்சி முன்னாள் தலைவா்கள் கேத்தனூா் ஹரிகோபால், ஆறுமுத்தாம்பாளையம் பழனிசாமி, அனுப்பட்டி ஜெயகுமாா், கே.கிருஷ்ணாபுரம் படையப்பா மூா்த்தி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT