திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூ. 280 விலை உயா்ந்தது.
இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பருத்தி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வார ஏலத்துக்கு திருச்சி, கரூா், திண்டுக்கல், திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 215 விவசாயிகள் தங்களுடைய 3,645 மூட்டை பருத்திகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.
திருப்பூா், தாராபுரம், கரூா், பொள்ளாச்சி, அவிநாசி உள்ளிட்ட இடங்களிலிருந்து 12 வணிகா்கள் பருத்தி வாங்குவதற்காக வந்திருந்தனா். விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் தா்மராஜ் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.
குவிண்டால் ரூ. 5,000 முதல் ரூ. 6,980 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 5,750. இவற்றின் விற்பனைத் தொகை ரூ. 70 லட்சத்து 82 ஆயிரத்து 740 ஆகும். கடந்த வாரத்தை விட இந்த வாரம் குவிண்டால் ரூ. 280 விலை உயா்ந்துள்ளது. இந்த தகவலை திருப்பூா் விற்பனைக் குழு முதன்மைச் செயலாளா் பாலசந்திரன் தெரிவித்தாா்.