திருப்பூர்

காங்கயம் அரசுக் கல்லூரியில் நாளை இறுதிக்கட்ட கலந்தாய்வு

DIN

காங்கயம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான  இறுதிக்கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) நடைபெறவுள்ளது.
காங்கயம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2019-2020 ஆம் கல்வியாண்டில் முதுகலை பாடப் பிரிவில் சேர்ந்து பயில்வதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்த விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. இதில் எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், எம்.காம்., எம்.எஸ்சி. கணிதம், எம்.எஸ்சி. கணிப்பொறி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு இறுதிக் கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 
இந்தக் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர் உரிய சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் இரண்டு நகல்களோடு, பெற்றோருடன் கலந்து கொள்ள வேண்டும் என கல்லூரி முதல்வர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT