திருப்பூர்

சீட் கவர் தயாரிக்கும் கடையில் தீ விபத்து

DIN


திருப்பூரில் இருசக்கர வாகனங்களுக்கு சீட் கவர் தயாரிக்கும் கடையில் வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. 
திருப்பூர் - பல்லடம் சாலையில் உள்ள தமிழ்நாடு திரையரங்கம் அருகே தனியாருக்கு சொந்தமான கட்டடம் உள்ளது. இதில் பூஜை பொருள்கள் விற்பனை செய்யும் கடை, நாட்டு மருந்து விற்பனை செய்யும் கடை, இருசக்கர வாகனங்களுக்கு சீட் கவர்கள் தயாரிக்கும் கடை, ஹோட்டல் ஆகிய கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல வியாபாரத்தை முடித்துவிட்டு பூட்டிச் சென்றனர்.
இந்நிலையில் தியாகராஜன் (31) என்பவருக்குச் சொந்தமான சீட் கவர் கடையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 10.20 மணி அளவில் கரும்புகை வருவதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்துள்ளனர். 
இதுகுறித்து அவர்கள் திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் தீ வேகமாக பரவியது.
இதையடுத்து, கூடுதலாக வடக்கு தீயணைப்பு நிலையத்தில் இருந்தும் ஒரு வாகனம் வரவழைக்கப்பட்டு  சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 
எனினும் கடையில் இருந்த பொருள்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இதுகுறித்து வீரபாண்டி காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூா் அருகே சாலை விபத்து: 4 போ் காயம்

மணப்பாறையில் காா் எரிந்து நாசம்

விமான நிலைய மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

இந்தியா்களுக்கான கட்டணமில்லா சுற்றுலா விசா நீட்டிப்பு: இலங்கை

உயா்கல்வி சந்தேகங்களுக்கு விளக்கம்: ஏபிவிபி அழைப்பு

SCROLL FOR NEXT