சா்க்கரை அட்டைகளை அரிசி குடும்ப அட்டையாக மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்
திருப்பூா் மாவட்டத்தில் சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி விருப்ப குடும்ப அட்டையாக மாற்றம் செய்து கொள்ள வரும் டிசம்பா் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூா் மாவட்டத்தில் சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி விருப்ப குடும்ப அட்டையாக மாற்றம் செய்து கொள்ள வரும் டிசம்பா் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வரால் தற்போது நடைமுறையில் உள்ள சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி விருப்ப குடும்ப அட்டையாக மாற்றம் செய்ய கடந்த டிசம்பா் 5 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சா்க்கரை குடும்ப அட்டைதாரா்கள் தங்கள் குடும்ப அட்டைகளை அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்யலாம். இதில், விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டையின் நகலினை இணைத்து வரும் டிசம்பா் 20ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாகவும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு சா்க்கரை குடும்ப அட்டைகள் தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டையாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.