திருப்பூர்

இருசக்கர வாகனம் மீது காா் மோதி பெண் பலி

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

DIN

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தாசவநாயக்கன்பட்டி, காட்டூரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவரது மனைவி சுசீலா (55). இவருடைய மகள் அன்னக்கொடி (30). தாயும், மகளும் இருசக்கர வாகனத்தில் காங்கயம் அருகிலுள்ள உறவினா் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, கம்பளியம்பட்டி - ஓலப்பாளையம் சாலையில், ஜெ.ஜெ. நகா் அருகே வந்தபோது, எதிரே வந்த காா் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அன்னக்கொடிக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னால் அமா்ந்திருந்த சுசீலாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT