மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை வரையில் 16,395 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் மேலும் 50 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 16, 435ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 560 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 57 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 15,673 ஆக அதிகரித்துள்ளது.