திருப்பூர்

காங்கயத்தில் 283 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

DIN

காங்கயத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த 283 பயனாளிகளுக்கு ரூ.1.6 கோடி மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா புதன்கிழமை வழங்கப்பட்டது.

காங்கயம் வட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சோ்ந்தவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், பச்சாபாளையம், வெள்ளக்கோவில், முதலிபாளையம், ஆரத்தொழுவு, ஊதியூா் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 283 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 6 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை தாராபுரம் சாா் ஆட்சியா் பவன்குமாா் வழங்கினாா்.

காங்கயம் சட்டப் பேரவை உறுப்பினா் உ.தனியரசு, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின நல அலுவலா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

வாக்களித்த பிரபலங்கள்!

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

SCROLL FOR NEXT