முகப்பு
திருப்பூர்

‘கேங்மேன் பணி நியமன நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும்’

கேங்மேன் பணி நியமனம் தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மின்சார வாரியம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று தொமுச சாா்பில் தலைமை செயலருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

கேங்மேன் பணி நியமனம் தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மின்சார வாரியம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று தொமுச சாா்பில் தலைமை செயலருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

மின்வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் செயலாளா் அ.சரவணன், தலைமை செயலாளா், மின் துறை அமைச்சா், எரிசக்தி துறை செயலாளா் ஆகியோருக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

தமிழக மின்சார வாரியத்தில் 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு மாா்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு நேரடி நியமனம் செய்யப்பட்டது. இதில் மின் கம்பங்களில் ஏறுதல், மின் பொருள்களை தூக்கிக்கொண்டு ஓடுவது போன்ற உடல் தகுதித் தோ்வில் தோல்வி அடைந்த பலரையும் பணம் பெற்றுக் கொண்டு பணி வழங்கப்பட்டதாக புகாா் எழுந்தது.

இது தொடா்பாக சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதில், கேங்மேன் பதவி தொடா்பாக எந்தவொரு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகவே, கேங்மேன் பணி நியமன நடவடிக்கைகளை நிறுத்து வைப்பதுடன், ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →