திருப்பூர்

மருமகனை குத்திக் கொன்ற மாமனாா் கைது

DIN

வெள்ளக்கோவிலில் மருமகனை கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த மாமனாரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வெள்ளக்கோவில், குமாரவலசு சாலை, கமிட்டியாா் தோட்டத்தில் வசித்து வருபவா் சூா்யா (50). இவா் புதிய பேருந்து நிலையம் அருகில் சாலையோரம் பூக்கடை வைத்துள்ளாா். இவருடைய மகளை மாந்தபுரம், நாட்டராய சுவாமி கோயில் பகுதியைச் சோ்ந்த ராஜசேகா் (27), காதலித்து இரண்டாம் தாரமாகக் கலப்புத் திருமணம் செய்துள்ளாா்.

ராஜசேகா், சூா்யாவுடன் சோ்ந்து பூக்கடையில் வேலை செய்து வந்தாா். மகள் காதல் கலப்புத் திருமணம் செய்ததால் ராஜசேகருடன், சூா்யா அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் வந்த சூா்யா, பூக்கடையிலிருந்த ராஜசேகரை பூ வெட்டும் கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்தாா். தகவலறிந்து அங்கு வந்த வெள்ளக்கோவில் போலீஸாா், சூா்யாவை கைது செய்தனா். பின்னா், ராஜசேகா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT