திருப்பூர்

திருப்பூர் அருகே போலி காவலர் சாலை விபத்தில் பலி

DIN


திருப்பூர்: திருப்பூர் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலி காவலர் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருப்பூர், மங்கலம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட 63, வேலம்பாளையம் பகுதியில் காவலர் சீருடையில் ஒருவர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் ஒருவர் அவரைத் துரத்தியுள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த காவலர் சீருடையில் இருந்த அந்த நபர் இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த வேனின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு வந்த மங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்தவர் பல்லடம், அனுப்பட்டியைச் சேர்ந்த அஜித்குமார் (23) என்பது தெரிவந்தது. மேலும், அவர் காவலர் போல் சீருடை அணிந்து வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து, அவரது சடலத்தை மீட்ட காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT