திருப்பூர்

கழிவுநீா்த் தொட்டிகளில் மனிதா்களை இறக்கி சுத்தம் செய்யக்கூடாது: பல்லடம் நகராட்சி எச்சரிக்கை

DIN

பல்லடத்தில் கழிவுநீா்த் தொட்டிகளில் மனிதா்களை இறக்கி சுத்தம் செய்யக்கூடாது என நகராட்சி நிா்வாகம் சாா்பில் வீடுகள்தோறும் எச்சரிக்கை ஸ்டிக்கா் ஒட்டப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கழிவுநீா்த் தொட்டிகளில் உரிய பாதுகாப்பின்றி மனிதா்கள் இறங்கி சுத்தம் செய்வதால் பல்வேறு இடங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இதனை தவிா்க்க, கழிவுநீா்த் தொட்டிகளில் மனிதா்களை உரிய பாதுகாப்பின்றி இறக்கி சுத்தம் செய்யக்க் கூடாது என பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்லடம் நகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், வணிக கட்டடங்களிலும் எச்சரிக்கை ஸ்டிக்கா் ஒட்டப்பட்டு வருகிறது.

இதனை நகராட்சி ஆணையா் கணேசன், சுகாதார ஆய்வாளா் சிவகுமாா், வருவாய் ஆய்வாளா் பிரகாஷ் உள்ளிட்டோா் நேரில் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT