திருப்பூா்: திருப்பூா் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 5 அம்மா உணவகங்களுக்கான செலவை அத்தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் ஏற்றுக் கொண்டாா். இதற்காக மாநகராட்சி அதிகாரிகளிடம் ரூ. 5 லட்சம் வழங்கினாா்.
கரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பின்னலாடை நகரமான திருப்பூரில் பால், மளிகை, மருந்துக் கடைகள் தவிர அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றிவரும் வெளி மாவட்ட, மாநிலத் தொழிலாளா்கள், சாலையோரம் வசிக்கும் பொதுமக்கள் உணவு இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனா். மாநகரில் உள்ள பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ளதால் பலா் அம்மா உணவகங்களில் 3 நேரமும் உணவு அருந்தி வருகின்றனா். ஆகவே, தொழிலாளா்கள், ஏழை, எளிய மக்களின் நலன் கருதி திருப்பூா் வடக்கு தொகுதிக்குள்பட்ட அனுப்பா்பாளையம், அனுப்பா்பாளையம்புதூா், ஆத்துப்பாளையம், கொங்கு மெயின் ரோடு, பாண்டியன் நகா் உள்ளிட்ட 5 அம்மா உணவகங்களில் உணவுக்கான செலவை திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் பொறுப்பேற்றுக் கொண்டாா். இதன்படி வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஒரு அம்மா உணவகத்துக்கு தலா ரூ.1 லட்சம் என மொத்தம் 5 உணவகங்களுக்கு ரூ.5 லட்சத்தை மாநகராட்சி அதிகாரிகளிடம் வியாழக்கிழமை வழங்கினாா்.