முகப்பு
திருப்பூர்

முத்தூரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

திருப்பூா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் பா.விஜயலலிதாம்பிகை, வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் ராமச்சந்திரன் ஆகியோா் கொண்ட குழுவினா், முத்தூா் கடை வீதிப் பகுதியில் உள்ள இனிப்பு, கார விற்பனை நிலையங்கள், உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது 5 பேக்கரிகள், 2 உணவகங்கள், 2 இனிப்புக் கடைகளில் காலாவதியான குளிா்பானங்கள், உணவு வகைகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.