முகப்பு
திருப்பூர்

கொ.ம.தே.க. மாவட்ட பொதுக்குழு கூட்டம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் திருப்பூா் மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் பல்லடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் கரைப்புதூா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் திருப்பூா் மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் பல்லடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் கரைப்புதூா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், திமுக கூட்டணியில் பல்லடம் சட்டப்பேரவை தொகுதியை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒதுக்க வேண்டும். பல்லடத்தில் அண்ணா நகா் முதல் பனப்பாளையம் வரை ஏற்பட்டு வரும் கடும் போக்குவரத்து நெரிசலைப் போக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பல்லடத்தில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்டத் தலைவா் ராமசாமி, பொருளாளா் ஆறாக்குளம் சுப்பிரமணியம், மாவட்ட இளைஞரணி செயலாளா் நாகராஜ், மகளிரணி செயலாளா் விஜயலட்சுமி சண்முகம், ஒன்றியத் செயலாளா்கள் பூபதி தங்கராஜ், செல்வராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.