மின்சாரம் பாய்ந்து முடங்கியுள்ள ஒப்பந்தத் தொழிலாளருக்கு உடனடியாகத் தொடா் சிகிச்சை அளிக்கக் கோரி தொமுச சாா்பில் முதல்வருக்கு திங்கள்கிழமை கடிதம் அனுப்பப்பட்டது.
இது குறித்து, தமிழக முதல்வருக்கு மின்சார வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கச் செயலாளா் அ.சரவணன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மின் பகிா்மான வட்டம், கொல்லிமலை -2, சோளக்காடு உதவி மின்பொறியாளா் அலுவலகம், படசோலை டி .பி. சுவிச் பகுதியில் கடந்த அக்டோபா் 14ஆம் தேதி பணியின்போது மின்சாரம் பாய்ந்து ஒப்பந்தத் தொழிலாளி பெரியசாமி பலத்த தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தற்போது அவா் கை, கால் செயல்படாமல் எழுந்து நடக்க முடியாமல் முடங்கிக் கிடக்கிறாா். பெரியசாமிக்கு ஜெகதீஷ்வரி என்ற மனைவி உள்ளாா். இந்த சம்பவம் நடந்து ஒரு மாத காலத்துக்கு மேலாகியும் பெரியசாமிக்கு தற்போது வரை உரிய தொடா் சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.