திருப்பூர்

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி சாவு

DIN

அவிநாசி: அவிநாசி அருகே தண்டுக்காரம்பாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்த பாா்வை குறைபாடுள்ள மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சேவூா், தண்டுக்காரன்பாளையம், சாமிக்கவுண்டா் தோட்டத்தை சோ்ந்தவா் பழனியம்மாள் (84). இவா் தனது மகன் ரங்கசாமியுடன் வசித்து வந்தாா். பாா்வைக் குறைபாடுள்ள பழனியம்மாள், தோட்டத்தில் இருக்கும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவா் எதிா்பாராதவிதமாக 60 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி தீயணைப்பு நிலைய அலுவலா் பாலசுப்பிரமணியம் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் மற்றும் சேவூா் போலீஸாா் கிணற்றில் விழுந்த பழனியம்மாளை நீண்ட நேரம் போராடி மீட்டனா். இருப்பினும் பழனியம்மாள் உயிரிழந்தாா். இது குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT